அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ள OMPஅலுவலகம் முதலில் ஐந்து பேர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமா? மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி கு.மகாலட்சுமி


மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் நலன் கருதி
மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஓஎம்பி என அழைக்கப்படும் அலுவலகம் முதற்கட்டமாக இங்குள்ள ஐந்து பேர்களின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவார்களின் அப்பொழுது இவ் அலுவலகம் மீது மக்கள் நம்பிக்கை கொள்வர் எனமன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி கு.மகாலட்சுமி இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று வியாழக் கிழமை (11.07.2019) மன்னார் பிரiஐகள் குழு மற்றும்
மன்னார் நகர சபை ஆகியோரின் அனுசரனையுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடைபெற்றது. இவ் போராட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி கு.மகாலட்சுமி இங்கு தொடர்ந்து பேசுகையில் நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்Nhரின் உறவினர்கள் தங்கள் உறவுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கான விடிவு இன்னும் ஏற்படாது இருந்து வருகின்றது.

இவ் பிரச்சனையை ஒரு பெருமதியான பிரச்சனையாக சம்பந்தப்பட்டவர்கள்
மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கமானது
இதிலிருந்து தவறி வருகின்றது

அத்துடன் இந்த மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளபோதும் முதற் கட்டமாக குறைந்தது ஐந்து பேர்களின் பிரச்சனையாவது தீர்த்து வைக்கப்பட வேண்டும் என நாங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இவ் வீதியில் போராடிக்
கொண்டிருக்கின்ற இந்த தருனத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கான அலுவலக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இவர்களின் நீதியை பெற்றுக் கொடுக்க ஏன் இங்கு சமூகமளிக்கவில்லை என்பதை இங்கு கேட்டு நிற்கின்றேன்.

இந்த மாவட்டத்தில் இந்த அலுவலகம் ஒரு கண் துடைப்புக்காகவே திறந்து
வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் சரியான முறையில் இயங்குகின்றது என்பதை எடுத்துக்காட்ட முதற் கட்டமாக இங்குள்ள ஐந்து பேர்களின்
பிரச்சனைகளுக்காவது நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது முதற் கோரிக்கையாக இருக்கின்றது.

அப்பொழுதுதான் இந்த ஓஎம்பி என்று அழைக்கப்படும் இவ் மன்னார் அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என வேண்டி நிற்கின்றேன் என்றார்.

மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ள OMPஅலுவலகம் முதலில் ஐந்து பேர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமா? மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி கு.மகாலட்சுமி Reviewed by Author on July 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.