மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பகல்லூரிக்கு நிரந்தரமான அதிபர் இல்லாமையினால் கற்றல் செயல்பாடுகளில் மந்தம் மாணவர்கள் விசனம்….
மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பகல்லூரிக்கு நிரந்தரமான அதிபர் இல்லாமையினால் கற்றல் செயல்பாடுகளில் மந்தம் மாணவர்கள் விசனம்….
21-05-2019 அன்றுடன் ஓய்வுபெற்றுச்சென்றுள்ள கணபதிப்பிள்ளை செந்தில்வேற்பிள்ளை போதனாசிரியர் மின்இந்திரவியல்
SLTES-அவர்களுக்கு பின்பு தற்போது வவுனியா தொழிநுட்பகல்லூரியின் அதிபராக கடமையாற்றுகின்ற திரு.A.நற்குணேஸ்வரன் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் வருகைதரும் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இருப்பினும் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மந்தகதியில் நகர்வாதாகவும் 03துறை சார்ந்த பயிற்சி வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கவலைக்குரிய விடையமே…
என்ன காரணம் என்றால்….
- வருகைதரும் கல்லூரி அதிபர் கிழமையில் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் மட்டும் தான் மிகுதி 05 நாட்களும் அதிபர் இன்றியே கல்லூரி செயற்படுகின்றது இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்ள பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.
- விரிவுரையாளர்களின் வருகையும் குறைந்துள்ளது.
- மாணவர்களின் வருகையும் குறைந்துள்ளது.
- தற்காலிக அதிபரும் விடுமுறை எடுத்தால் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செற்பாடுகள் முழுமையாக பாதிப்படைகின்றது.
மன்னார் மாவட்டத்தின் கல்வித்திணைக்களங்கள் உருவாகி ஓரிருவருடங்களில் மூடுவிழா கண்டவிடும் அதற்கு காரணம் மாணவர்களின் வரவு குறைவும் பொறுப்பாக கடமையினை மேற்கொள்ளாதா நிர்வாகமும் அதே போன்று இக்கல்லூரியும் மூடுவிழாக்காணமல் இருக்கவேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்ககை எடுக்கவேண்டும்.
மிகவிரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு அதிபரை நியமிக்கும் தகுதியில்லாமலா... எமது அரசியல் தலைவர்கள் உள்ளனர் மாணவர்களின் கல்விவளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
மன்னாரின் எழுச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சி
மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பகல்லூரிக்கு நிரந்தரமான அதிபர் இல்லாமையினால் கற்றல் செயல்பாடுகளில் மந்தம் மாணவர்கள் விசனம்….
Reviewed by Author
on
July 12, 2019
Rating:
No comments:
Post a Comment