அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் இணைந்த இலங்கை! ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம் -


இலங்கை பொறியியல் மாணவர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட ராவணா-1 செய்மதி விண்வெளியில் எடுத்த முதலாவது புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சமிக்காவினால் இந்த செய்மதி நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 17 ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இலங்கை மற்றும் அதற்கு அருகில் உள்ள எல்லைகளை புகைப்படம் எடுப்பது மற்றும் ஆய்வு செய்வதே இந்த செய்மதியின் நோக்கமாகும்.
அதற்கமைய ஜப்பான் மற்றும் இலங்கைக்கு அருகில் எடுக்கப்பட்ட செய்மதி புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக விண்ணுக்கு ஏவப்பட்ட முதலாவது செய்மதி ராவணா-1 என்பது குறிப்பிடத்தக்கது.



வரலாற்றில் இணைந்த இலங்கை! ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம் - Reviewed by Author on August 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.