அண்மைய செய்திகள்

recent
-

மடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா இன்று நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை.2019

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை15.08.2019 காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கை கத்தோழிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின்
தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா  ஆகியோர் இணைந்து  திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும்,ஆசிரும் இடம் பெரும்.இதன் போது நூற்றுக்கணக்கான குருக்கள்; கலந்து கொண்டிருந்தனர்.
முப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத
திருவிழா இடம் பெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு,நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா இன்று நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை.2019 Reviewed by Author on August 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.