அண்மைய செய்திகள்

recent
-

தலை மன்னார் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 574 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு-(படம்)

மன்னார் மற்றும் தலை மன்னார் கடற்கரை பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை கடற்படையினர் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 574.5 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினர் நடுக்குடா, சௌத்பார், ஓலைத் தொடுவாய் மன்னார்,தலைமன்னார் ஆகிய கடற்கரை பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய 10 மூடைகளை மீட்டதோடு,குறித்த மூடைகளில் சுமார் 574.5 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலைகள் யாழ் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


தலை மன்னார் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 574 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு-(படம்) Reviewed by NEWMANNAR on August 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.