அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா!!

வ/சேமமடு சண்முகாநந்தா மகாவித்தியாலயத்தினுடைய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திரு.பொ.கணேசலிங்கம் தலைமையில் (03.08.2019)அன்று நடைபெற்றது.

64 வருட காலப்பகுதிக்குள் மாணவர்களுக்கு ஞான ஒளி கொடுத்த 175 அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வவுனியா அரசாங்க அதிபர் ஜனாப்.ஐ.எம்.ஹனீபா மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்னமலர் சுரேந்திரன்,வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியால அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் வவுனியா தெற்கு வலய ஆசிரிய வளநிலைய மத்திய முகாமையாளர்; திரு.வீ.பரஞ்சோதி,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சிவராசா,வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம்,சேமமடு புத்தகசாலை உரிமையாளர் த.பத்மசீலன்ஆகியோர் கலந்து கொண்டனர்

இவ் விழாவானது சேமமடு சண்முகாந்தா வித்தியாலயத்தின் புலம்பெயர் பழைய மாணவர்களின் நிதி பங்களிப்புடன் பாடசாலையின் அதிபர் திரு கணேசலிங்கத்தின் தலைமையில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜெயமோகன் நோர்வே நாட்டின் சேமமடு பழைய மாணவன் நடராஜா நகுலன் மற்றும் அனுசன் ஆகியேரின் ஒழுங்கமைபப்பில் இவ்விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்களுக்கு பாராட்டும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா!! Reviewed by Author on August 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.