அண்மைய செய்திகள்

recent
-

ஓம் முருகா உனக்குமா......!!!

ஓம் முருகா உனக்குமா.....!!!

ஓம் முருகா.......
முருகா உனக்குமா......
நானும்  உன்னிடம் தானா...
நல்லூர் கந்தா நலம்தானா..

கந்தா உன்னிடம்
வந்து போனேன் தினம்
நொந்து போகுது மனம்
சந்தியில் ஆ...என்னிடம்

கையில் வேலோடு கலியுக வேலனே
காணக்கண்கோடி வேண்டுமே
காலை மாலை தினம் எம்மை
காப்பான் முருகன் -எம் இனம்

கையில் பூச்சட்டியோடு-மனப்
பையில் பாரமில்லாமல்-நாம்
நெய்விள்க்கேற்றி-தினம்...தினம்
நம்பிக்கையில் வந்தோமே....

தும்பிக்கையாளனின் தம்பியே...!
துணிவு கொண்டோமே... உன்னை நம்பியே...!
துக்கம் போக்க வந்த  சிவபெருமான் பிள்ளையே...!
துகில் சோதனை தொல்லையே....!

ஆறுபடை வீடு கொண்ட தமிழ் கடவுளே....
அறு தடை நீடு நூறு முகம் கொண்ட முருகா
அழகான  உன்வதனம் தரிசிக்க தடையா-எம்மை
ஆளும் தலைவா தடை தகர்த்து தரிசனம் தர வா.... வா...

நெற்றிக்கண்ணாளனே
வெற்றி தருவாய் எண்ணாளுமே-உன்னை
சுற்றி சூழும் பக்தர்கள் கோடி கோடியே...தேடி தேடியே
பற்றிக்கொள் பக்தியின் வடிவமே
பராசக்தியின் உருவமே


கவிஞர் வை.கஜேந்திரன்BA

ஓம் முருகா உனக்குமா......!!! Reviewed by Author on August 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.