அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா-படங்கள்

மன்னார் மறைமாவட்ட தலைமன்னார் இறைமக்களின் பாதுகாவலரான புனித லோறன்சியாரின் திருவிழா சனிக்கிழமை 10-08-2019 காலை பங்குமக்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி.அகஸ்ரின் புஷ்பராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் திருவிழா திருப்பலியினை கண்டி தேசிய குருமடத்தின் மெய்யியல்பீட முன்னை நாள் இயக்குனர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அருட்பணியாளர்கள் யேசுராஜா, அலெக்சாண்டர் பெனோ சில்வா, லக்ஸ்ரன் டி சில்வா, ஜெஸ்லி ஜெகானந்தன், விமல் அமதி, அமல்ராஜ் குருஸ், அருட்சகோதரிகள் ஆகியோரும் திருவிழாத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

விருந்தினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.செல்வம் அடைக்கலநாதன், திரு.சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிரெட்லி மற்றும் கடற்படை, பொலிஸ் உயர் அதிகாரிகளும், பங்குமக்களும் இறைமக்களும் புனித லோறன்சியாரின் ஆசீரைப் பெற்றுக் கொண்டனர்.










தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா-படங்கள் Reviewed by Author on August 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.