வவுனியாவில் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து தரிப்பிடம் -
வவுனியாவில் இன்று காலை பெய்த கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நீர் வழிந்தோடி செல்லும் பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் குழாய்கள் காணப்படுவதினால் நீர் வழிந்தோடிச் செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பேருந்து தரிப்பிடம் நீரில் மூழ்கியுள்ளது.
அத்துடன் கூமாங்குளம், நெளுக்குளும் பகுதியினைச் சேர்ந்த வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மனமகிழ்வடைந்துள்ளனர்.
வவுனியாவில் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து தரிப்பிடம் -
Reviewed by Author
on
August 17, 2019
Rating:
No comments:
Post a Comment