அண்மைய செய்திகள்

recent
-

மன்/சொர்ணபுரி மத்திய மகா வித்தியாலயத்திற்கான 20 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடிக் கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

மன்/சொர்ணபுரி மத்திய மகா வித்தியாலயத்தில் கைத்தொழில்,  வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (2019.09.10) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேச கல்விப் பணிப்பாளர் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு செல்லத்தம்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் பாடசாலை நிருவாகம் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





மன்/சொர்ணபுரி மத்திய மகா வித்தியாலயத்திற்கான 20 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடிக் கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா Reviewed by Author on September 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.