திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய பாதயாத்திரை முடிவு -
திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு ஆரம்பமான பாதயாத்திரை இன்று மாலை ஆலயத்தில் நிறைவடைந்தது.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரையானது ஏழு நாட்கள் தொடர்ந்து இன்று மாலை திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தினை சென்றடைந்தது.
குறித்த பாத யாத்திரையின் போது பல ஆலயங்களை தரிசித்து இரவு நேரங்களில் ஆலயங்களில் தங்கியிருந்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் முகமாக ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இப் பாதயாத்திரை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பல வருடங்களாக பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாத யாத்திரையின் போது பல்வேறு அதிசயங்களை தங்களால் காண நேர்ந்ததாக பாத யாத்திரையில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.
திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய பாதயாத்திரை முடிவு -
Reviewed by Author
on
September 19, 2019
Rating:
No comments:
Post a Comment