அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்-நுண் கடன் திட்டத்தில் அவதியுறும் குடும்பங்கள் 'இது விதியா' நாடகம்

நுண் கடன் திட்டத்தால் கடன் பெறும் மன்னார் மாவட்ட விவசாயிகள் மற்றும்
ஏனைய குடும்பத்தார் நாளாந்தம் தங்கள் குடும்பங்களில் அவதியுறும்
சம்பங்களை 'இது விதியா' என்ற தலைப்பின் கீழ் ச.லெபோன்ராஜ் தலைமையில்கொண்ட குழுவினர்  கலை நிகழ்வாக காண்பித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்பத்தினர்.

இவ் நிகழ்வில்  500 க்கு மேற்பட்ட விவசாயிகள், விவசாய அமைப்புக்களின்
தலைவர்கள், பிரதேச மட்ட கமநல விவசாய அதிகாரிகள், பெண்கள் குழு
பிரதிநிதிகள், விவசாய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அதாவது பலர் வாழ்வாதார தொழிலுக்காக நுண் கடன்களைப் பெற்று அவ் பணத்தை தங்கள் ஆடம்பரச் செலவுக்கு செலவழித்தபின் பெற்றக் கடனை மீளச் செலுத்த முடியாது கடன் வழங்கியவர்களின் நெருக்கடிக்கு உள்ளாகும்போது ஈற்றில் கடன் பெற்ற பெண்கள் தற்கொலைக்கு உள்ளாகி வரும் செயல்பாட்டினையே தங்கள் கலைகளின் மூலம் எடுத்துறைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இவ் நிகழ்வை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்
(மெசிடோ) அனுசரனையுடன் மன்னார் மாவட்ட விவசாய பெண்கள் குழுவின் (மெசிடோ) ஒழுங்கமைப்பில்  செவ்வாய் கிழமை (24.09.2019) நானாட்டான் பகுதியில் இவ் நிகழ்வு நடைபெற்றது.








 


மன்னாரில்-நுண் கடன் திட்டத்தில் அவதியுறும் குடும்பங்கள் 'இது விதியா' நாடகம் Reviewed by Author on September 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.