அண்மைய செய்திகள்

recent
-

ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய ஆளுமையின் உடல் அடக்கம்.. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு!


ஜிம்பாப்வேவை 37 ஆண்டுகள் ஆட்சி செய்த ராபர்ட் முகாபேயின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளின் ஜனாதிபதிகள் பங்கேற்றனர்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் ஜனாதிபதியாக தொடர்ந்து 37 ஆண்டுகள் இருந்தவர் ராபர்ட் முகாபே. இவரது ஆட்சி கடந்த 2017ஆம் ஆண்டு கவிழ்ந்தது. பிரபல அரசியல்வாதியுமான இவர், கடந்த வாரம் சிங்கப்பூரில் வயது மூப்பு காரணமாக தனது 95வது வயதில் காலமானார்.
அதனைத் தொடர்ந்து, அவரது உடல் ஹராரே நகரில் இன்று அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான எமர்சன் நங்கக்வா, அவரது உடல் ஹராரேயில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

இதனால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முகாபேயின் குடும்பத்தினர், ‘அவரது அடக்கம் தனியார் நிகழ்ச்சியாக நடத்தப்படும். அரசு நிகழ்சியாக நடத்த அனுமதிக்க மாட்டோம். முகாபேயின் சொந்த ஊரான குடாமாவில் தான் உடல் அடக்கம் செய்யப்படும்’ என தெரிவித்தனர்.
அதன் பின்னர், முகாபேயின் குடும்பத்தினருடன் அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் வீரர்களின் நினைவிடத்தில் முகாபேயின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில் முகாபேயின் இறுதிச்சடங்கில் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், கியூபாவின் பிரபல தலைவர் ரால் கேஸ்ட்ரோ மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் பங்கேற்கிறார்கள்.



ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய ஆளுமையின் உடல் அடக்கம்.. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு! Reviewed by Author on September 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.