அண்மைய செய்திகள்

recent
-

தேசிய அரச விருது பெற்ற மன்னார் கலைஞர்கள்-படங்கள்

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது விழா 2019  தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் மற்றும் இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு மனோகணேசன் அவர்களால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கொழும்பு தாமரைத்தடாக (நெலும் பொக்குன) மண்டபத்தில்   02.09.2019  மாலை தேசிய நிகழ்வாக இடம்பெற்ற "தமிழ் இலங்கையருக்கான அரச விருது" வழங்கும் விழாவில்...

 மன்னார் கலைஞர்கள்

  • கலைத்தவசி செ.செபமாலை குழந்தை-கலை மாமணி
    (அவர்களின் புதல்வன் அருட்தந்தை செ.அன்புராசா அவர்களுக்கும் கலைச்சுடர்  விருதானது வழங்கப்பட்டது.)
  • செழுங்கலை வித்தகர் செ.மாசிலாமணி-கலை மாமணி
    செந்தமிழருவி மஹா தர்மகுமார குருக்கள்-கலைச்சுடர் 
  • திருமதி  ரவீந்திரநாத் கிறிஸ்தோப்பர் றஞ்சனா கிரிஸ்ரலின்-கலைச்சுடர்
  • செல்வி துர்க்கா பாக்கியராசா-நடனம் -கலை இளவரசி
இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பல்வேறு வயதுப்பிரிவுகளைச்சேர்ந்த பல்வகை கலைத்தொடர்புடைய 222 கலைஞர்களுக்கு விருதும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவித்தனர.

அதில் 30 வயதுக்கு உட்பட்ட இளங்கலைஞர்களுக்கு கலை இளவரசன்/ கலை இளவரசி விருது வழங்கப் பெற்றது.
35-60 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர் விருதும்
60 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை மாமனி விருதும்
உலகப்புகழ் பெற்ற ஏராளமான கலைஞர்களும் இந்நிகழ்வில் மேற்படி கௌரவங்களைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற அனைவருக்கும் நியூமன்னார் இணைய குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தொகுப்பு-கவிஞர் வை-கஜேந்திரன்-










தேசிய அரச விருது பெற்ற மன்னார் கலைஞர்கள்-படங்கள் Reviewed by Author on September 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.