அண்மைய செய்திகள்

recent
-

பெருமாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்


வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப் பெருமாளுக்கு எதிராக வவுனியாவில் இன்று (05) போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கடந்த 930ஆவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன், தமிழர் ரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதை ஒன்றினை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

வரதராஜப்பொருமாள் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எவரும் இல்லை அவர்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும், சர்வதேச விசாரணைகள் எவையும் இடம்பெறப் போவதில்லை, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் சிறையிலுள்ளவர்கள் விடுதலையாவார்கள் எனவே கோத்தபாயவை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு வெளியிட்டப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பெருமாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் Reviewed by Author on September 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.