அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணின் இரண்டு கலைஞர்களின் நூல்களுக்கு தேசிய சாகித்திய விருது-படங்கள்

வருடா வருடம் நடைபெறுகின்ற அரச இலக்கிய விழாவானதும் இம்முறையும் மிகவும் சிறப்பாக 12.09.2019 வியாழக்கிழமை அன்று  கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 இலங்கை அரச இலக்கிய விருது வழங்கல் நிகழ்வில் மன்னார் மண்ணின் இரண்டு கலைஞர்களின் நூல்கள் சிறந்த படைப்புக்கான தேசிய விருதினையுன் சான்றிதழையும் பணப்பரிசையும் பெற்றுள்ளது.
  • அருட்தந்தை செ.அன்புராசா அடிகளார்களின் ‘அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும்’ என்ற நூலுக்கு 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் சிறுவர் இலக்கியத்துக்கான தேசிய சாகித்திய விருதும்.
  • தேசியக்கலைஞர்   திரு எஸ்.ஏ.உதயன் நாவலாசிரியர்  அவர்களின் அலுவாக்கரை நாவலுக்கு 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நாவல் இலக்கியத்துக்கான தேசிய சாகித்திய விருதும்.வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 மேலும் இவ்விருது வழங்கும் விழாவில் கலாநிதி ஶ்ரீகணேஷன்  காவேரி கலாமன்ற இயக்குநர் வண. யோசுவா,திரு.வடிவழகன் போன்றோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். மேலும் சாகித்திய ரத்னா விருதினை தமிழ் இலக்கிய எழுத்தாளர் ஐ.சாந்தன் அவர்களுடன் சிங்கள, ஆங்கில மொழிகளில் இலக்கியம் படைக்கும் இருவர் பெற்றுக்கொண்டனர்.

விருது பெற்ற மன்னார் கலைஞர்களுக்கும் ஏனைய கலைஞர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தொகுப்பு கவிஞர் வை.கஜேந்திரன்BA



மன்னார் மண்ணின் இரண்டு கலைஞர்களின் நூல்களுக்கு தேசிய சாகித்திய விருது-படங்கள் Reviewed by Author on September 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.