அண்மைய செய்திகள்

recent
-

நிலுவையை செலுத்தி நீர் துண்டிப்பை தவிர்க்கவும்--மன்னார் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் எதிர்வரும் 09ம் திகதிக்கு முன்னர் தங்களின் நீர்ப்பட்டியலில் நிலுவைத் தொகையினைச் செலுத்தி நீர் இணைப்புத் துண்டிப்பினை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் ஏறக்குறைய 2500 ற்கும் மேற்பட்ட பாவனையாளர்களினால் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை .

எனவே இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நடைபெறவிருக்கின்ற நீர்த்துண்டிப்பினை தவிர்த்துக்கொள்ளவும், மீள் இணைப்பு மற்றும் தண்டப்பணம் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளவும். பாவனையாளர்கள் இறுதி நீர்ச்சிட்டையிலுள்ள முழு நிலுவைத் தொகையினையும் செலுத்தி தமது அசௌகரியத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
நிலுவையை செலுத்தி நீர் துண்டிப்பை தவிர்க்கவும்--மன்னார் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு Reviewed by Author on September 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.