அண்மைய செய்திகள்

recent
-

பசி, பட்டினி 55 யானைகளின் உயிரை பலிவாங்கிய சோகம்! -


ஜிம்பாப்வேவில் நிலவிவரும் கடும் பசி பட்டினியால், 55 யானைகள் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டின் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பங்கினர் உணவு இன்றி பட்டினியில் வாடிவருகின்றனர்.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2 மாதத்தில் அங்கு 55 யானைகள் பசியால் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜிம்பாப்வேவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில்தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

15 ஆயிரம் யானைகள் மட்டுமே தங்கும் இடத்தில் தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் உள்ளன. இதனால் பட்டினி ஏற்பட்டு 55 யானைகள் பலியாகியுள்ளது.

யானைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவற்றை வெளிநாடுகளில் இருக்கும் உயிரியல் பூங்காக்களுக்கு விற்பது மட்டுமே ஒரே தீர்வு என ஹவாங்கே தேசிய பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பசி, பட்டினி 55 யானைகளின் உயிரை பலிவாங்கிய சோகம்! - Reviewed by Author on October 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.