அண்மைய செய்திகள்

recent
-

“வன ரோப” தேசிய மரநடுகை நிகழ்சி திட்டம் மன்னாரில் ஆரம்பித்து வைப்பு-படங்கள்

வன பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெறும் வன ரோப நிகழ்சி திட்டதின் கீழ் மன்னார் மாவட்ட மடு வட்டார வன அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வன அரண ரெக்கவரண” மர நடுகை வேலைத்திட்டமானது  இன்று காலை 10.00 மணியளவில் மன்/வட்டக்கண்டல் அ.த.க பாடசாலையில் அதன் அதிபர் S.தேவதாஸ் தலைமையில்  இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் கலந்து சிறப்பித்ததுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தார் அத்துடன் குறித்த நிகழ்விற்கு மன்னார் மாவட்ட வன பாதுகாப்பு திணைகள அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டதுடன்.

இவ் நிகழ்சிக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை வளாகத்தில் வன அரண ரெக்கவரண நிகழ்சி திட்டத்திற்கு அமைவாக மரக்கன்றுகள் விருந்தினர்களால் நாட்டிவைக்கப்படமை குறிப்பிடதக்கது.





“வன ரோப” தேசிய மரநடுகை நிகழ்சி திட்டம் மன்னாரில் ஆரம்பித்து வைப்பு-படங்கள் Reviewed by Author on October 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.