அண்மைய செய்திகள்

recent
-

சிறந்த மருத்துவராக வருவேன் -சு.சுமித்திராயினி மாணவி மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலை


2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரீட்டையில் மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களை சித்திபெற வைத்து மீண்டும் தன்னை நிரூபித்து காட்டியது மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலை. மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலை. சுமார் 35 மாணவ மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்மாணவமாணவிகளில் முதன்மையான இடத்தில் தனது திறமையால் முன்னிற்கின்றார் மாணவி சு.சுமித்திராயினி
மன்னார்  உப்புக்குளத்தினைச்சேர்ந்த திரு.சுந்தரராஜன்  (விவசாய விஞ்ஞானப்பட்டதாரியும் நகரசபையில் அபிவிருத்தி உத்தியோகத்தரர்-D-O) திருமதி சு.பாமதேஸ்வரி (கலைப்பட்டதாரி ஆசிரியை மன்.கரிசல் றோ.க.த.க பாடசாலை) தம்பதிகளின் புதல்வியான சு.சுமித்திராயினி (சுட் எண்-4749200)
2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரீட்டையில் மன்னார் மாவட்டத்தில் 190 புள்ளிகளைப்பெற்ற மாணவியாக திகழ்கின்றார்.

மாணவியிடம் தங்களது எதிர்கால ஆசை என்ன வினவியபோது....
நான் அதிகாலை எழுந்து ஊக்கத்துடன் விடாமுயற்சியுடனும்  கற்றேன் அத்தோடு வீட்டில் எனக்கு ஊக்கமளித்த எனது பெற்றோருக்கும் பாடசாலையில் சிறந்த முறையில் கற்றுத்தந்த ஆசிரியர் G.பிரதீபன் அவர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் எனது நன்றிகள் அத்தோடு எனது எதிர்கால இலக்கு சிறந்த மருத்துவராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே இந்நிலைக்கு காராணமான எல்லாம்வல்ல இறைவனை நினைவில் கொள்கின்றேன்.
"இவரது மூத்த சகோதரி சு.சூர்யாயினி 2017 ஆண்டு  புலமைப்பரீட்டையில் 167 புள்ளிகளைப்பெற்றுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது."

இவ் வெற்றிக்காய் உழைத்த மன்.சித்திவிநாயகர் தேசிய கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ,சகல வழிகளிலும் உதவியாய் இருந்த பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் சித்தியடைந்த மாணவிக்கும்  எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்.

 சந்திப்பு-வைகஜேந்திரன்,BA
சிறந்த மருத்துவராக வருவேன் -சு.சுமித்திராயினி மாணவி மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலை Reviewed by Author on October 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.