அண்மைய செய்திகள்

recent
-

மன்/ பறப்பாங்கண்டல் றோ.க.த.க பாடசாலையில் உலக சிறுவர் தினம்-படங்கள்

மடு கல்வி வலயம் மன்/பறப்பாங்கண்டல் றோ.க.த.க பாடசாலையில் 01/10/2019 திகதியன்று உலக சிறுவர் தினம் புதிய அதிபர் திரு F.X.அன்ரன் சேவியர் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி
திரு S.R.யதீஸ்  அவர்களும் சிறப்பு விருந்தினராக பறப்பாங்கண்டல் பங்குத்தந்தை வணபிதா றஜனிகாந் அடிகளார்  அவர்களும் இவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
முதலில் திருப்பலிப்பூசை நிறைவடைந்து பாடசாலை நோக்கி வருகை தந்த மாணவர்களை அதிபர் ஆசிரியர்கள் பூத்தூவி இனிப்புக்கொடுத்து  வரவேற்றனர்  பின்னர் மாணவர்களினால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன

இதில் அதிபர் ஆசிரியர் சிறப்பு பிரதம விருந்தினர்களினால் சிறுவர் உரிமைகள் சிறுவர் பாதுகாப்பு உலக சிறுவர் தினத்தின் நோக்கம் தொடர்பாக உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் அன்பளிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன

இதில் விசேட அம்சமாக
மன்/ பாலையடிப்புதுக் குளம் றோ.க.த.க பாடசாயைில் இருந்து மாற்றமாகி வந்த புதிய அதிபரை வரவேற்கும் முகமாக திரு S.R.யதீஸ் அவர்களினால் "உதயமாகட்டும் 9A" எனும் திட்டம் அங்குராப்பணம் செய்யப்பட்டு தரம் - 11 மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டது இந்த
"உதயமாகட்டும் 9A" என்பது இவ்வருட ஆரம்பத்தில் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மன்/ தட்சனாமடு பாடசாலை , மன்/ பெரியபண்டிவிரிச்சான் ஆகிய பாடசாலைகளில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




















மன்/ பறப்பாங்கண்டல் றோ.க.த.க பாடசாலையில் உலக சிறுவர் தினம்-படங்கள் Reviewed by Author on October 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.