அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களுக்காய் இரு கண்களையும் இழந்தவரின் தற்போதைய நிலை-

2007 ஆண்டு விடுதலை புலிகளுக்கும் இரானுவத்தினருக்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் ஒரு காலையும் இழந்த நிலையில் செய்வது அறியாது வாழ்ந்து வருகின்றார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளியான இராமையா புஷ்பரெட்ணம்

இரண்டு பிள்ளைகளுடன் மனைவியின் துனையோடு வாழ்ந்து வரும் இராமையா புஷ்பரெட்ணம் கண் மற்றும் காலை இழந்த நிலையில் யுத்தம் நிறைவடந்த பின்னர் கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்துவருகின்றார்

தொடர்சியாக மீள்குடியேறி பல்வேறு பட்ட சிரமங்கள் மற்றும் பொருளாதார கஸ்ரத்தின் மத்தியில் போரட்ட நினைவுகளை சுமந்தவாரு வாழ்கையை கொண்டு செல்கின்றார் சில நேரங்களில் ஒரு வேலை உணவுடனே உறங்க போகும் நிலையில் உள்ளது முன்னால் போராளியான இராமையா புஷ்பரெட்ணத்தின் வாழ்கை

இந்த நிலையில் இராமையா புஷ்பரெட்ணம் வாழ்வாதரத்திற்கு என பிரதேச செயலகம் ஊடாக சில கோழி குஞ்சு வழங்கப்பட்டுள்ளன ஆனாலும் பார்வை உள்ளவர்களே ஒழுங்காக பராமரிக்க முடியாத கோழி குஞ்சுகளை பராமரித்து வாழ்வாதரத்தை கொண்டு செல்லலாம் என்று நம்பிய புவனேஸ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது நோய்காரணமாகவும் கன மழைகாரணமாகவும் அனைத்து கோழி குஞ்சுகளும் இறக்க என்ன செய்வது என்று தெரியாமல் வெறும் கோழி கூடுகளோடு வாழ்ந்து வருகின்றார்கள்

மதிய உணவுக்காக  திரிபோசாவுடன் வாசலின் நின்றவாறு வீதியை பார்த்துகொண்டு இருக்கும் முன்னால் போராளியின் மகன் குடும்ப வறுமை காரணமாக அம்மம்மாவிட்டில் தங்கியிருக்கும் மகள் தன்னையும் பார்த்து 5 வயது மகனையும் கவனித்து பார்வையற்ற கணவனோடே காலத்தை கழிக்கின்றார் அவருடைய மனைவி

பசிக்கு வறுமை தெரியாது என்பதால் எனோ ஒருவேலை உணவுக்காகவாவது உழைக்க வேண்டும் என தற்போது தோட்ட செய்கையில் ஈடுப்பட்டு வருகின்றார்  புஷ்பரெட்ணம்    அதுவும் மனைவியின் துணையின்றி முடியமல் போகின்றது

தற்போது மருத்துவச்செலவும் அதிகரித்துவருவதால் என் செய்வது என்று அறியாமல் திண்டாடும்  புஷ்பரெட்ணம் பார்வையற்றவர்கள் செய்யக்கூடிய ஏதவது தொழிவாய்ப்பை செய்வதற்கான உதவியை கோருகின்றார் எமக்காக போராடி கண்பார்வை இழந்த புஷ்பரெட்ணம் போன்ற போராளிகளுக்கு கோடி கோடியாய் கொடுக்காவிட்டாலும் ஒரு வேலை உணவுக்காவது உதவி செய்ய வேண்டியது எமது கடமையல்லவா....




தமிழ் மக்களுக்காய் இரு கண்களையும் இழந்தவரின் தற்போதைய நிலை- Reviewed by Author on October 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.