அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் ஈழத்தமிழர்கள் பலரின் சாவிற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம்! ஓ.பன்னீர் செல்வம் -


காங்கிரஸ் அரசாங்கம் எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் - நாங்குநேரி பகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து, மறுகால் குறிச்சி என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பாவத்திற்கு அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும், தி.மு.க. வின் ஆட்சியுமே காரணம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் பலரின் சாவிற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம்! ஓ.பன்னீர் செல்வம் - Reviewed by Author on October 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.