அண்மைய செய்திகள்

recent
-

20 அம்ச கோரிக்கைகளை ஏற்று சாதகமாக பதில் வழங்கியதை தொடர்ந்து ஈரோஸ் ஜனநாயக முண்ணனி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு

எதிர்வரும் 16 திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அன்ன சின்னத்தில் பொது வேட்பாளராக களம் இரங்கும் சஜித் பிரேமதாஸவிற்கு முழு அதரவை வழங்குவதாகவும் ஒட்டு மொத்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்குகளை வழங்க்கி வெற்றி பெற செய்யுமாறு ஈரோஸ் ஜனநாயக முன்னனியின் வடமாகாண இணைச் செயளாலர் அருளப்பு இராசநாயகம் தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாரு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

வருகின்ற ஜனாதிபதி தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றுவதற்காக 34 பேர் போட்டியிடுகின்றார்கள் அவற்றிலே சஜித் பிரேமதாச அவர்களும் கோத்தபாய ராஜபக்ஸவும் தான் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றனர் இவர்களில் ஒருவர்தாம் ஜனாதிபதியாக போகின்றார்கள் இந்த நிலையில் ஈரோஸ் ஜனநாயக முன்னனியானது சஜித்பிரேம தாச அவர்களை கடந்த மாதம் 18 ஆம் திகதி சந்தித்து 20 அம்ச கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம் அந்த கோரிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச அளித்த பதில்கள் சாதகமாகவும் எமக்கி திருப்தி அழிக்க கூடியதாகவும் இருந்தமையினால் நாங்கள் எமது மத்திய குழுவுடன் ஆலோசித்து அவருக்கு ஆதரவு அழிக்க முடிவெடுத்துள்ளோம்

தொடர்சியாக ஏனைய மாவட்டங்களில் எமது தேர்தல் பிரச்சார வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளருடன் இனைந்து  சஜித் பிரேம தாசவிற்கு ஆதரவாக பிரச்சார வேலைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார் .

குறித்த ஊடகவியளாலர் சந்திப்பில் ஈரோஸ் ஜனநாயக மக்கள் முண்ணனியின் மாவட்ட இணைப்பாளர்கள் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.


20 அம்ச கோரிக்கைகளை ஏற்று சாதகமாக பதில் வழங்கியதை தொடர்ந்து ஈரோஸ் ஜனநாயக முண்ணனி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு Reviewed by Author on November 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.