அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இதுவரை 47 வீதமான மக்கள் வாக்களிப்பு-படங்கள்

இலங்கையினுடைய 7 வது ஜனாதிபதி தேர்தலானது நடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலையில் தற்போதைய கணிப்பின் படி காலை 7 மணி தொடக்கம் தற்போதுவரை 47.95 வீதமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் சுமார் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ்நிர்மலநாதன் மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் காலை 8.00 மணிக்கும் அமைச்சர் ரிஸாட் பதிவுதீன் காலை 10.30 மணியளவில் தாராபுரம் பாடசாலையிலும் செல்வம் அடைக்கலநாதன் 11 மணியளவில் விடத்தல் தீவு பாடசாலையிலும் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை 5.00 மணிவரை வாக்குகள் அளிக்கப்படுவதுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.





மன்னாரில் இதுவரை 47 வீதமான மக்கள் வாக்களிப்பு-படங்கள் Reviewed by Author on November 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.