அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல வாக்கு முடிவுகள்! -


இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 9,221 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1,255 வாக்குகளையும், அநுரகுமார 349 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 59 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 11,522, அளிக்கப்பட்ட வாக்குகள் 11,448, செல்லுபடியான வாக்குகள் 11,268, நிராகரிக்கப்பட்டவை 180.

மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல வாக்கு முடிவுகள்! - Reviewed by Author on November 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.