அண்மைய செய்திகள்

recent
-

நல்ல செயலில் மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம்-படம்

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த இளைஞர் ஒருவரின் பெறுமதி வாய்ந்த தங்கச்சங்கிலி ஒன்று குறித்த பேரூந்தினுள் தவர விடப்பட்ட நிலையில் குறித்த சங்கிலி மீட்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றில் மன்னார் சாவட்கட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார்.

இதன் போது குறித்த இளைஞர் தான் அணிந்திருந்த பெறுமதி வாய்ந்த  2 ½ பவுண் தங்கச்சங்கிலியை குறித்த பேரூந்தினுள் தவர விட்ட நிலையில் வீடு சென்றுள்ளார்.

-குறித்த பேரூந்தினுள் தங்கச் சங்கிலியை அவதானித்து கண்டு எடுத்த குறித்த தனியார் பேரூந்தின் நடத்துனர் குறித்த பேரூந்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

இதன் போது சங்கிலிலை தவர விட்டவர் மன்னார் தனியார் பேரூந்து சங்கத்திடம் முறைப்பாடும் செய்திருந்தார்.குறித்த சங்கிலியை பெற்றுக்கொண்ட குறித்த பேரூந்தின் உரிமையாளர் அதனை மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரீ.றமேஸ் அவர்களிடம் கையளித்தார்.

இந்த நிலையில் குறித்த பெறுமதி வாய்ந்த தங்கச் சங்கிலி இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை மன்னார் மனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் வைத்து உரியவரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த தனியார் பேரூந்தினுள் தங்கச் சங்கிலியை கண்டு எடுத்த நடத்துனரையும், அதனை மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திடம் ஒப்படைத்த பேரூந்தின் உரிமையாளரையும் மக்கள் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நல்ல செயலில் மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம்-படம் Reviewed by Author on November 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.