அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கலைஞர் யோ.ஆரோக்கியம் குரூஸ் கலைக்குரிசில் விருது-படம்


வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக10/11--10/2019 இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்றிருந்தன.

வட மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நடத்தப்பட்தோடு
மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் I.M.கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப்பிரிவின் 10ம் வட்டாரம் கலைமாடம் வங்காலைச்சேர்ந்த

ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் நாடக நெறியாளரும் மறை சமூக தமிழ் தன்னார்வப்பணியாளருமாகிய தர்ம பிரபஷ்வரா தேசிய விருது பெற்ற யோசப் ஆரோக்கியம் குரூஸ் அவர்களிற்கு  கலைக்குரிசில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

கலைஞர் யோசப் ஆரோக்கியம் குரூஸ் அவர்களிற்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்


தொகுப்பு -வை.கஜேந்திரன்BA-


மன்னார் கலைஞர் யோ.ஆரோக்கியம் குரூஸ் கலைக்குரிசில் விருது-படம் Reviewed by Author on November 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.