அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கல்விப் பரீட்சை..படம்

வட மாகாணத்தில் வவுனியா, மன்னார் நிர்வாக மாவட்டங்களிலுள்ள மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மாணவர்களுக்கான வருடந்த மறைக்கல்வி பரீட்சை வியாழக்கிழமை (28.11.2019)  இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலியம், கல்விப்பணியகத்தினால் இதன் இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளாரின் தலைமையில் இவ் பரீட்சைகள் இடம்பெற்றன.

இவ் பரீட்சையில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 46 பங்குகளிலிருந்தும் 186
பாடசாலைகளில் 12700 கத்தோலிக்க மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

இவ் பரீட்சைத்தாள்களின் திருத்த வேலைகள் சனிக்கிழமை ஞாயிறு ஆகிய இரு தினங்கள்  (30.11.2019, 01.12.2019) மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி
நடுநிலையத்தில் கத்தோலிக்க மற்றும் மறைவாழ்வுப் பணியாளர்களினால்
முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கல்விப் பரீட்சை..படம் Reviewed by Author on November 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.