பாலியாறு கிராமத்தில் அமைக்கப்பட்ட முன்பள்ளி வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலியாறு கிராமத்தில் அமைக்கப்பட்ட பாலியாறு முன்பள்ளி இன்று திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக திறந்த வைக்கப்பட்டது.
நெதர்லாந்து நாட்டின் ரூக்கீட் (rock ids) பவுன்டேசன் அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் அமுலாக்கத்தில் கீழ் குறித்த முன்பள்ளி அமைக்கப்பட்டது.
-குறித்த முன் பள்ளியை வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார், நெதர்லாந்து நாட்டின் ரூக்கீட் ( (rockids) பவுன்டேசன் அமைப்பின் நிதிகள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
-குறித்த கிராமத்தில் உள்ள சிறுவர்களின் ஆரம்ப கல்வியை பூர்த்தி செய்ய முன் பள்ளி இல்லாத நிலையில் குறித்த காலியாற்று கிராமத்தில் முன் பள்ளி ஒற்றை அமைத்துத்தர வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் குறித்த அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.
-கோரிக்கைக்கு அமைவாக அமைக்கப்பட்ட குறித்த முன் பள்ளி இன்று திங்கட்கிழமை(4) காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
.
-அதனைத்தொடர்ந்து முன்பள்ளி சிறுவர்களினால் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிழக்வில் பங்குத்தந்தை,பொலிஸ் அதிகாரி,கிராம அலுவலகர்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாலியாறு கிராமத்தில் அமைக்கப்பட்ட முன்பள்ளி வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
November 04, 2019
Rating:
No comments:
Post a Comment