அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'பார்வளன்' நாடக சரிதம் நூல் வெளியீட்டு விழா! படம்

மன்னார் நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த புலவர் செபமாலை மொத்தம் போல் அவர்கள் எழுதிய 'பார்வளன்' என்ற நாட்டுக்கூத்து நாடக நூல் வெளியீட்டு விழா நேற்று முற்தினம் சனிக்கிழமை காலை (09.11.2019) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளாரின் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை   கலந்து கொண்டார். இதன் போது பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நிகழ்வுக்கு முன்னிலை வகுத்தார்.குறித்த நிகழ்வில்   பல அரச அதிகாரிகள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'பார்வளன்' நாடக சரிதம் நூல் வெளியீட்டு விழா! படம் Reviewed by Author on November 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.