அண்மைய செய்திகள்

recent
-

இந்த நாட்டின் ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவே-மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்-(படம்)

இந்த நாட்டில் வாழ்கின்ற பௌத்த,இந்து, கத்தோழிக்க,முஸ்ஸீம் மக்களின் ஏகோபித்த தலைவராக இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என  அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது.இதன் போது மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவழக்கையிலே அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

நாட்டின் தலைவரை தெரிவு செய்கின்ற இத்தேர்தலிலே குறிப்பாக வன்னி மாவட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வின் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் மக்கள் சுமூகமாக வாக்களிக்கின்றனர்.

-எதிர் தரப்பினர் வாக்குகளை குழப்புவதற்காக சதிகளை மேற்கொண்டாலும் மக்கள் சதிகளையும் தாண்டி வாக்களிப்பதை காணக்கூடியாதாக உள்ளது.

-குறிப்பாக இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் இருந்து அவர்களின் வாக்குகளை அழிப்பதற்காக பேரூந்துகளில் மன்னார் வருகின்ற போது  அடாவடி புரிகின்ற எதிர்க் கட்சியினர் மக்கள் பயணித்த வாகனங்களை தாக்கி அடித்து பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

-எனினும் மக்கள் தமது வாக்குறிமையை பயண்படுத்த வேண்டும் என்று அத்தனை அராஜகங்களையும் தாண்டியும் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.

இத் தேர்தலிலே இந்த நாட்டில் வாழ்கின்ற பௌத்த,இந்து, கத்தோழிக்க,முஸ்ஸீம் மக்களின் ஏகோபித்த தலைவராக இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.



இந்த நாட்டின் ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவே-மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்-(படம்) Reviewed by Author on November 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.