அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தி சாதாரண தர பரிட்சை-மன்னார் நகர சபை உறுப்பினர் S.R.குமரேஸ்.

மாணவர்களாகிய நீங்கள் உங்களின் உயர் கல்வியை தொடர்வதற்கும்,உங்களின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இடம் பெறவுள்ள கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை அமைந்துள்ளது என மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவியுடன் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து எதிர் வரும் மாதம் இடம் பெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது குறித்த கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

சாதாரண தர பரிட்சை ஊடாகவே உங்களின் எதிர்கால இலக்கை அடைய முடியும். எனவே இடம் பெறும் கருத்தமர்வின் ஊடாக உரிய பலனை அடைய வேண்டும்.

இடம் பெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று  மாவட்டத்திற்கும்,பாடசாலைக்கும்,பெற்றோருக்கு பெருமையை ஈட்டித்தர வேண்டும்.

பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகரசபை பிரிவுக்கு உற்பட்ட பாடசாலைகளில் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் தோற்றும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட குறித்த இலவச கருத்தரங்கில் மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள்,நகர சபை அதிகாரிகள், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் உற்பட நூற்றுக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





மாணவர்களின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தி சாதாரண தர பரிட்சை-மன்னார் நகர சபை உறுப்பினர் S.R.குமரேஸ். Reviewed by Author on November 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.