அண்மைய செய்திகள்

recent
-

கோட்டாபய கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் வெளியானது! இதோ முழு அறிக்கை -


இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த நவம்பர் 16ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 52.25 சதவீத வாக்குகளை பெற்று வென்றார்.

ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட கோட்டாபய நவம்பர் 18ம் திகதி பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் தனது முதல் உத்யோகப்பூர்வ பயணமாக இந்தியா சென்று வந்தார்.
இந்நிலையில், பதவியேற்று கடந்து 10 நாட்களில் அவரால் மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்கள் வெளியாகியுள்ளது.
  • மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்.
  • 15% சதவீதமாகக் காணப்பட்ட VAT வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல்.
  • தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல்.
  • அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல்.
  • அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படத்துவதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.
  • இடைக்கால் அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல்
  • சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம்.
  • 9 மாகாணங்களினதும் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வலையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை.
  • பெரும்பான்னை வாக்கு வங்கி பற்றி நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணநை்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல்.
  • இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எமது நாட்டிற்கு வருகைத் தந்து, எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.
  • ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல்.
  • கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல்.
  •  

Image
கோட்டாபய கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் வெளியானது! இதோ முழு அறிக்கை - Reviewed by Author on December 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.