அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டெங்கு நோயினால் மாணவி மரணம்...

மன்னாரில் டெங்கு நோயிற்கு உட்பட்ட மாணவி ஒருவர் மன்னார்  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணத்தை தழுவிக்கொண்டார்.

மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குற்பட்ட மன்னார் நகரில்
அமைந்துள்ள சின்னக்கடையில் வசிக்கும் மன்னார் புனித சவேரியார் பெண்கள்தேசிய பாடசாலையில் மூன்றாம் ஆண்டு கல்வி கற்ற மாணவியான மரியதாசன் டிவினியா வயது 9 என்னும் மாணவியே   டெங்கு நோய்க்கு உள்ளாகி இறந்தவராவார்.

முசலி மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற்கொண்ட விசாரனையில் இறந்த மாணவிக்கு கடந்த 30 ந் திகதி காய்ச்சல் வந்ததாகவும் பின் முதலாம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் மருந்து எடுக்கப்பட்டு வீட்டுக்கு
அழைத்துச் சென்றதாகவும்.

ஆனால் காய்ச்சல் விடாமையால் மீண்டும் 3 ந் திகதி மன்னார் வைத்தியசாலையில் சேர்பித்து வைத்தியம் செய்யப்பட்டபோதும் சிகிச்சை பலணளிக்காமையால் இவ் மாணவி இன்று 05.12.2019 வியாழன் அதிகாலை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் டெங்கு நோயினால் மாணவி மரணம்... Reviewed by Author on December 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.