அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களுக்கு தெளிவூட்டல்......பத்து நாளில் மொத்த பணத்தினையும்........பொதுச்சந்தை கடைத்தொகுதி-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொருவருட இறுதியிலும் நத்தார் பண்டிகை பொதுச்சந்தை கடைத்தொகுதி  வருவது வழக்கம் இம்முறையும்  வந்துள்ளது.
20/12/2019 முதல் புது வருடப்பிறப்பு வரை இச்சந்தைகடைத்தொகுதி இருக்கும் அதனால் மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கலில் இருந்தும் ஏராளமான மக்கள் படையெடுத்து வந்து பொருட்களை அள்ளிச்செல்லுகின்றனர்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள்தான் கட்டாயம் வேண்ட வேண்டும் அல்லவா.... பிறகு என்ன வேண்ட வேண்டியது தானே......  என்று தானே நினைக்கின்றீர்கள்  நீங்கள் நினைப்பதுசரிதான்.
 
 வேண்டுங்கள் யார் உங்களை தடுப்பது......! ஆனால் முதலில் சிந்தியுங்கள் 
  • குறைந்த விலை....
  • மலிவான விலையில்....
  • நிறைய பொருட்கள் வாங்கலாம்  ஆம் ஆனால் நீங்கள் வாங்குகின்ற ஒவ்வொரு பொருட்களின் 
  • தரம் தராதரம்  
  • பாவிக்கும் காலம்  தீமைகள்  பற்றி  அறிந்ததுண்டா....?
 விலைக்கேற்றபடிதான் பொருளின்  தரம் இருக்கும்
பொருளின் தரத்திலும் விலை தங்கியிருக்கும்....

 
பலர் பணத்தினை ஊண்டியல் போட்டு உடைத்து இச்சந்தைக்கு கொண்டு வருகின்றார்கள் இன்னும் சிலர் வட்டிக்கும்  லோனுக்கும் பத்தினை பெற்று இச்சந்தைக்கு வருகின்றார்கள்.  இப்படி வருகின்றவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாகவும்  கஷ்ரப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் ஏனையோர் சும்மா பொழுது போக்கிற்கா வந்து செல்கின்றார்கள்
பொழுதுபோக்கிற்கு வருபவர்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை ஆனால் மற்றவர்களுக்கே பாதிப்பு,,,,,,கட்டாயம் இருக்கும் அல்லவா.....

விடையத்திற்கு வருவோம்
மன்னார் நகரசபையினால் ஒவ்வொருகடைத்தொகுதியும் ஆரம்ப விலையாக 10க்கு 10 சதுரடி வெறும் 15000 ரூபா மட்டுமே  கேள்வி கோரல் விடப்படுகின்றது. ஆனால் ஏலம் எடுப்பவர்கள் 50000 ரூபா முதல் 100000 ரூபா தாண்டியும் ஏலமெடுக்கின்றார்கள்  என்றால் அவர்கள் யாரை குறிவைக்கின்றார்கள்.  எமது மன்னார் மக்களைத்தான்
இம்முறை சுமார் 301 கடைத்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது என தகவல் அப்படியாயின் 301*15000 பெருக்கிப்பாருங்கள் மொத்தம் எவ்வளவு வரும் என்று

இது வெறும் அடிப்படை கோரல் மூலம் பெறப்படும் பணம்  அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்கள்  தக்களின் பணத்திணை எடுக்கலாம் நல்ல இலாபம் பெறலாமென்ற நம்பிக்கையில்தான் ஏலம்  எடுக்கின்றார்கள்.

மன்னார் நகர சபைக்கு ஆண்டுக்கு இந்த  சந்தை மூலம் 4 முதல் 5 கோடியோ இலாபம் வரலாம் அதை வைச்சுக்கொண்டு மன்னார் நகரை  அபிவிருத்தி செய்யலாம் நல்ல  விடையம்.
ஆனால் இச்சந்தை மூலம் உண்மையில் அதிக இலாபம் அடைபவர்கள் யார்
  • மன்னார் நகர சபையோ.....
  • மன்னார் மக்களுக்கோ.....
  • மன்னார்  வியாபாரிகளுக்கோ.... கிடையாது மாறாக வெளிமாவட்ட வியாபாரிகளுக்கே
சற்று சிந்தித்துப்பாருங்கள்.....
மன்னார் நகர சபைக்கு இந்தசந்தை மூலம் 4 முதல் 5 கோடியோ இலாபம் வரலாம் என்று சொல்லும் எங்களால் 301 கடைத்தொகுதி மூலம் மன்னார் மண்ணில் இருந்து  எமதுமக்களிடம் இருந்து எத்தினை கோடிரூபா  வெளியில் போகும் என்று யாராலும் சொல்ல முடியுமா.....அதைதடுக்கத்தான் முடியுமா.......
360 நாள் சேர்த்து பத்துநாளில் மொத்தமாய்  கொடுத்து விட்டு  வாங்கிய பொருட்களின் ஆயூட்காலம் 90நாட்களில் முடிந்து விட மீண்டும் இச்சந்தையை எதிர்பார்த்து மக்கள் புரியாமல் புன்னகையுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.......

மன்னார் மக்களின் பணத்தினை 10 நாளில் மொத்தமாய்வெளிமாவட்ட வியாபாரிகள் கொண்டு சென்றால் எப்படி மன்னார் மாவட்டம் அபிவிருத்திஅடையும் சிந்தியுங்கள்......

இங்கு யார் புத்திசாலிகள்......?
இங்கு யார் முட்டாள்கள்.......?

  • மன்னார் நகர சபையா....
  • மன்னார் மக்களா....
  • வெளிமாவட்ட   வியாபாரிகளா.....

சொல்ல வருகின்ற விடையம் இங்கு யாருக்கும் புரியாமலில்லை......

இதுவும் எமது மன்னாரின் வளம் வெளியில்  அங்கீகாரத்துடன் கொண்டு செல்லப்படுகின்றது.
தெரிந்தும் தெரியாமல்  இருக்கின்றோம்  ஏன் என்றுதான்  புரியவில்லை......
என்ன செய்யலாம்.......
இந்த  சந்தை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை வேண்டும் எப்படி வேண்டும்
  • நல்ல தரமான பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
  • வெளிமாவட்ட வியாபாரிகளை குறைத்து மன்னார் வியாபாரிகளுக்கு முன்னுரிமைகொடுக்கப்படவேணும்.
  • ஏலத்தொகையை குறைத்தால் தரமான பொருட்களை நிறைவான  குறைவான விலையில் பெறலாம் .
  •  உங்களது பணம் உங்களது கையில் உள்ளது முடிவும் நீங்கள் தான் எடுக்க வேண்டும்.
யாருக்குமே பாதிப்பு இருக்காது மன்னார் மக்களின் பணம் மன்னார் மாவட்டத்திலே சுழற்ச்சியில் இருக்கும் மன்னார் மாவட்டம் தானாகவே அபிவிருத்தி அடையும்.

இருப்பதை எல்லாம் வாரிக்கொடுத்துவிட்டு அடுத்தவனிடம் கையேந்தும் நிலமைக்கு வரப்போகின்றோமா.....????
எனக்கென்ன என்று இருந்தால் கடைசியில் எதுவும் ..........!
கொஞ்சம் சிந்திப்போம்.
 -மன்னார் விழி-




































மன்னார் மக்களுக்கு தெளிவூட்டல்......பத்து நாளில் மொத்த பணத்தினையும்........பொதுச்சந்தை கடைத்தொகுதி-படங்கள் Reviewed by Author on December 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.