அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிப்பு-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கடும் மழைகாரணமாக பல்வேறு தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக மழை பெய்துவருவதனால் பல ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன் பல தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது

குறிப்பாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், கட்டைகாடு மடுக்கரை போன்ற கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளன தொடர்சியாக மழை பெய்துவருவதனால் மேலும் சில தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் அச்சம் காணப்படுகின்றது அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருவதுடன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்

சில கிராமங்களில் வீதிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத நிலையில் ஒழுங்கான வடிகாள் அமைப்புக்கள் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் தாமாக முன்வந்து கொட்டும் மழையிலும் கால்வாய்களை ஆளப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை குறிப்பிடதக்கது.

மன்னார் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிப்பு-படங்கள் Reviewed by Author on December 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.