அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-மீண்டும் மழை தொடர்சியாக பாதிக்கப்படும் தாழ் நில கிராம மக்கள் -படங்கள்

மன்னார் மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் பல தாழ் நில கிராமங்கள் வெள்ளப்பாதிப்பை எதிர் கொண்டுள்ளதுடன் கதிர் விளைந்த நிலையில் நெற்செய்கைகளும் பதிப்படைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் மழை பெய்யாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் தொடக்கம் மீண்டும் கடும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது குறித்த மழை காரணமாக மன்னார் மாவ்ட்டத்திள் உள்ள தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் காரணமாக தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் வெள்ளம் வடிதோடி சில நாட்களுக்கு முன்பாக வீடுகளுக்கு சென்ற நிலையில் மீண்டு கடும் மழை பெய்துள்ளது இதனால் குறித்த மக்கள் மீண்டும் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நெற்செய்கையில் தற்போது கதிர்கள் உருவாகும் காலப்பகுதி என்பதால் உருவாகியுள்ள கதிர்கள்  மழை காரணமாக கதிர்கள் உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் பெய்த மழை காரணமாக 6000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்செய்கை அழிவடைந்தமை குறிப்பிடதக்கது.



மன்னார்-மீண்டும் மழை தொடர்சியாக பாதிக்கப்படும் தாழ் நில கிராம மக்கள் -படங்கள் Reviewed by Author on December 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.