அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி உதவியுடன் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-படங்கள்

தனி நபர் தலைமைத்துவம் கொண்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு தொகுதியினருக்கு இன்று திங்கட்கிழமை(30) காலை பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில்,பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை30/12/2019 காலை 10.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது கணவனை இழந்த,காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 130 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட 14 விசேட தேவையுடையவர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான நிதி உதவிகள் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது.

-மேலும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 35 பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் கிராம அலுவலகர்,திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





மாந்தை மேற்கில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி உதவியுடன் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-படங்கள் Reviewed by Author on December 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.