அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பூசாரியார் குளம் கிராமத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி-ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்.

மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பூசாரியார் குளம் கிராம மக்கள்   இன்று  வியாழக்கிழமை 12/12/2019 காலை எதிர்ப்பு போரட்டம் ஒன்றை   மேற்கொண்டனர்.

பூசாரியார் குளம் கிராமத்தில் உள்ள    மக்களுக்கு  சொந்தமான பெருந் தொகையான காணிகளை அயல் கிராமமான  மதீனா நகர் கிராம   மக்கள் அபகரித்து வந்த நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அப்பகுதியில் குறித்த இரு கிராம மக்களுக்கும் இடையில்   கடும்  வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இப்போரட்டத்தில் வன்னி பாரளுமன்ற உறுப்பின்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், மற்றும் சிவமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

பூசாரியார் குளம் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 150 இற்கும் அதிகமான ஏக்கர் காணியில் உள்ள காடுகள் இவ்வாறு தள்ளப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளது.

-இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மடு பிரதேசச் செயலாளர் குறித்த பகுதியில் காணி தொடர்பில் மேற்கொண்டு வந்த அணைத்து நடவடிக்கைகளையும் இடை நிறுத்தினார்.

இந்த நிலையில் மடு பொலிஸார் மற்றும் வன வள திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்குச் சென்று காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







மன்னார் மடு பூசாரியார் குளம் கிராமத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி-ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள். Reviewed by Author on December 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.