அண்மைய செய்திகள்

recent
-

மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் 150 ஜுபிலி ' மாபெரும் நடைபவனி '

மன்னார் தேசிய பாடசாலையான புனித சவேரியார் ஆண்கள் கலலூரியின் 150 வது ஆண்டு யூபிலி தினத்தை முன்னிட்டு மாதாந்தம் நடைபெறும் ஒரு நிகழ்வாக இவ் பாடசாலையை சார்ந்தவர்களின் நடைபபவனி சனிக்கிழமை (11.01.2020) நடைபெறுகின்றது.

இவ் நடைபவனியானது காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் நடைபவனியில் இவ் பாடசாலையைச் சார்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பெற்றோர் என 2500 க்கு மேற்பட்டோர்  இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

இவ் நடைபவனி புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாசாலையிலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பமாகி எழுத்தூர் சந்தியை அடைந்து பின் புனித செபஸ்தியார் வீதியூடாக மன்னார் நுழை வாயில் பாலத்தை அடைந்து மன்னார் தலைமன்னார் வீதியூடாக மாதா ஆலயம் வந்து பின் கல்லூரியை இவ் நடைபவனியாளர்கள் வந்தடைவர்.

இவ் நடை பவனியின்போது பாடசாலை மாணவர்களின் களியாட்ட நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள் நடைபெறுவதுடன் வான்னூர்தி மூலம் பாடசாலை கொடி பறக்க விடப்பட்ட நிலையிலேயே இவ் நடைபவனி நடைபெறுகின்றது.


மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் 150 ஜுபிலி ' மாபெரும் நடைபவனி ' Reviewed by Author on January 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.