அண்மைய செய்திகள்

recent
-

தேசிய சமாதானப்பேரவையின் சமயநல்லிணக்க கருத்துப்பகிர்வு-படங்கள்

மன்னார் மாவட்த்தில் பல மட்டங்களில் சேiவாற்றுகின்ற தெரிவு செய்யப்பட்ட 20 முஸ்லீம் பெண்கள் கொண்டகுழுவிற்கான கலந்துரையாடல் நிகழ்வானது செவ்வாய்க்கிழமை 21-01-2020 மதியம் 2-30 மணியளவில் மன.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.


NPC- தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் MARR மன்.துயர் துடைப்பு மறு வாழ்வுச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட DIRC சர்வமதக்குழுவின் உறுப்பினர்கள் இணைந்து இவ்நிகழ்வினை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வின் கருப்பொருளாக கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பின்  பின் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சமய சமூகத்தின்பிரச்சினைகள் குறிப்பாக முஸ்லீம் பெண்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் அழுத்தங்கள் பற்றிய கலந்தராயப்பட்டதுடன் இனிவருங்காலங்களில் இப்படியான சூழலில் எவ்வாறு நாமும் நம்மைச்சுற்றியுள்ளவர்களுடன் சமுகமான உறவை மேற்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தினைகட்டியெழப்புவது தொடர்பாக கலந்தாரயப்பட்டது.

இவ்நிகழ்விற்கு மன்னார் மாவட்ட சர்வமதக்குழுவின் ஆலோசகர் திருமதி செ.சகந்தி செபஸ்தியன் முன்னாள் வலையக்கல்விப்பணிப்பாளர்மன்னார் அவர்களும்.

தேசிய சமாதானப்பேரவையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பாளர் திரு.மெடோசன் அவர்களும்.
மன்.துயர் துடைப்புமறு வாழ்வுச்சங்கத்தின் இணைப்பாளர் திரு.பீற்றர் சின்கிளயர் அவர்களும்
மன.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் முதல்வர் ஐனாப் M.Y.மாஹிர் அவர்களுடன் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.









தேசிய சமாதானப்பேரவையின் சமயநல்லிணக்க கருத்துப்பகிர்வு-படங்கள் Reviewed by Author on January 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.