அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-நெல் கொள்வனவு செய்தல் தொடர்பான விலை நிர்ணயம் விரைவில்-K.மஸ்தான்MP தெரிவிப்பு


தொடர்சியாக விவசாயிகள் வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் இருந்து விவசாய மக்கள் இனியும் பாதீப்படையாது வகையில்   நெல் கொள் முதலுக்கான நிர்ணய விலை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின்  தலைவருமாகிய  காதர் மஸ்தானின் மக்கள் சந்திப்பு நேற்றைய  தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 தொடக்கம் மாலை 5.30 மணிவரை இடம் பெற்றது.

இதன் போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  பூமலர்ந்தான் பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு  கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

கடந்த வருட இறுதியில் இடம் பெற்ற வெள்ளப்பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவற்றில் பாதிக்கப்பட்டு அழிவு அடைந்த நெற்செய்கைகளுக்கான நஸ்ர ஈடு வழங்குவதற்கான பணிகளில் விரைவில் நடை பெறவுள்ளது. கூடிய விரைவில் அவை நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை .

தற்போது நெல் கொள்முதல் தொடர்பாக விலை நிர்ணயம் செய்வதாக அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டுள்ளது.

அதில் என்ன கால தாமதம் என்பது தொடர்பாக மக்களின் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேசி அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை விவசாயிகளுக்கு நஸ்ரம் ஏற்படாத வகையில் கொள்வனவு செய்வதற்கான நாடவடிக்கைகளையும் நிர்ணயிக்கப்பட்ட விலையை உறுதி செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார்-நெல் கொள்வனவு செய்தல் தொடர்பான விலை நிர்ணயம் விரைவில்-K.மஸ்தான்MP தெரிவிப்பு Reviewed by Author on January 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.