அண்மைய செய்திகள்

recent
-

வடமாகணத்தில் முதல் முதலில் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் சாதனை நிகழ்வு..

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கல்வி கலாச்சார சமூக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றுவருகின்றது அதன் ஒரு பகுதியாக மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடைபவனியானது நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி எழுத்துர்  ஊடாக மன்னார் பாலம் வழியாக இடம்பெற உள்ளது.

குறித்து நடைபவனியில் மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட முன்னைனால் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

 குறித்த நடைபவனியில் வடமாகாணத்தில் முதல் முறையாக புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவரீதியாக ஹெலிகாப்டர் மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெறும் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் குறித்த நடைபவணியானது நிறைவடையவுள்ளது.

எனவே குறித்த நடைபவனியில் அணைத்து பழையமாணவர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகளை கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


வடமாகணத்தில் முதல் முதலில் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் சாதனை நிகழ்வு.. Reviewed by Author on January 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.