அண்மைய செய்திகள்

recent
-

சமாதானத்தையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு கருத்தமர்வு.

சமாதானத்தையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை (22) காலை 9.30 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் விழிர்ப்பணர்வு கருத்தமர்வு இடம் பெற்றது.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் குறித்த இடம் பெற்ற குறித்த கருத்தமர்வில் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், மற்றும் கிராம மட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துரைகளை ஊடகவியலாளர் ஏ.நிக்ஸன் வழங்கினார்.

இதன் போது ஊடகங்கள் ரீதியாக வெளி வருகின்ற செய்திகள் தொடர்பாகவும் அதனால் ஏற்படுகின்ற சாதக,பாதக நிலைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் மதங்களுக்கிடையில் சமாதானத்தையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






சமாதானத்தையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு கருத்தமர்வு. Reviewed by Author on January 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.