அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் சமாதனத்தை வலியுறுத்தி மன்னாரில் 48 நாட்கள் தவம் இருந்து உணவு தவிர்பு ஆரம்பம்-

நாட்டில் சமாதானம், ஏற்படவும்,சாதி,மத,இன,மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், நாட்டில் சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில்   சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி 48 நாட்கள் தொடர்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார்.

-இலங்கையின் சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தவம் இருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து உள்ளார்.

-ஆரம்ப நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கண்ணண் குருக்கள்,மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எஸ்.அசீம், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.செல்வக்குமரன் டிலான் , பாடசாலை மாணவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-தொடர்ச்சியாக 48 நாட்கள்  தவம் இருந்தும், உணவு தவிர்பு, மௌனவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் முடிவடையும்.என சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி தெரிவித்தார்.

-இவர் கடந்த வருடம் நாட்டின் சுதந்திர தினம் அன்று நாட்டின் ஒற்றுமையை வழியுறுத்தி மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலயத்தில் இருந்து அநுராதபுரம் சிறி மா போதி வரை அங்கப் பிரதட்சை(உருண்டு யாத்திரை) மேற்கொண்டார்.

-சுமார் 130 கிலோ மீற்றர் தூரம் இவ்வாறு உருண்டு யாத்திரை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.











நாட்டில் சமாதனத்தை வலியுறுத்தி மன்னாரில் 48 நாட்கள் தவம் இருந்து உணவு தவிர்பு ஆரம்பம்- Reviewed by Author on February 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.