அண்மைய செய்திகள்

recent
-

875 மில்லியன் ரூபா உடனடியாகத் தேவை- யாழ். மாவட்ட செயலர் கோரிக்கை -


“யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை முழுமைப்படுத்தல் உள்ளிட்ட அவசர அபிவிருத்திப் பணிகளுக்கு உடனடியாக 875 மில்லியன் ரூபா தேவை.”
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க.மகேசன் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போர் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசின் நிதியில் 8 ஆயிரத்து 600 வீடுகளும், இந்திய அரசின் நிதியில் 6 ஆயிரத்து 800 வீடுகளுமாக 15 ஆயிரத்து 400 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னமும் 19 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. அதிலும் 5 ஆயிரத்து 700 வீடுகள் உடனடியாகத் தேவை.

மேலும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டப் பணிகளை முழுமைப்படுத்த 475 மில்லியன் ரூபா உடனடியாகத் தேவை" - என்றார்.

875 மில்லியன் ரூபா உடனடியாகத் தேவை- யாழ். மாவட்ட செயலர் கோரிக்கை - Reviewed by Author on February 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.