அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் தையல் பயிற்சியை பூர்த்தி செய்த 98 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு-படம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் தையல் பயற்சியை பூர்த்தி செய்த 98 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை 28-02-2020 காலை 10 மணியளவில் எருக்கலம்பிட்டி முஸ்ஸீம் ம.வி பாடாசாலையில் இடம் பெற்றது.

சிறிய நடுத்தர அளவிலான வியாபாரம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியுடன், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஊடாக பெண்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தும் வகையில் எருக்கலம்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 98 பெண்களுக்கு அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் அஜித் ஜெயவர்த்தன,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகண்றாஸ், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தையல் பயிற்சியை பூர்த்தி செய்த 98 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரம் ஆகியவை விருந்தினர்களினால் வைங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் தையல் பயிற்சியை பூர்த்தி செய்த 98 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு-படம் Reviewed by Author on February 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.