அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சமய பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சமய நல்லிணக்கம் தொடர்பில் விழிர்ப்பணர்வு செயலமர்வு-(படம்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள  பாடசாலைகளில் சமய பாடம்   கற்பிக்கின்ற  ஆசிரியர்களுக்கு சமாதானம்,சமய நல்லிணக்கம் தொடர்பில் மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் மும் மத ஆசிரியர்களுக்கான விழிர்ப்புணர்வு செயலமர்வு இன்று சனிக்கிழமை08-02-2020 காலை 10 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையத்தில் இடம் பெற்றது.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு செயலமர்வில் மன்னார்,நானாட்டான,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் இருந்து சயம பாடம் கற்பிக்கின்ற சுமார் 150 ற்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-கருத்துரைகளை  ஆசிரியர் சிவாநந்தன் வழங்கினார்.

-மன்னார் மாவட்டத்தில் கிறிஸ்தவம்,இந்து,இஸ்ஸாம் பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு குறித்த செயலமர்வு இடம் பெற்றது.

-இதன் போது மாணவர்கள் மத்தியில் சமாதானம்,சமய நல்லிணக்கம்,ஒற்றுமை தொடர்பாக ஆசிரியர்கள் எவ்வாறு கற்றல் நடவடிக்கைகளை முன் னெடுக்க வேண்டும் இதனால் ஏற்படும் பிரதி பலன்கள் குறித்தும் விரிவாக விளக்க மளிக்கப்பட்டது.







மன்னார் மாவட்டத்தில் சமய பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சமய நல்லிணக்கம் தொடர்பில் விழிர்ப்பணர்வு செயலமர்வு-(படம்) Reviewed by Author on February 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.