மன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யுமாறு இளைஞர்கள் கோரிக்கை.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களை அரசியல் ரீதியில் முன்னேற்றும் வகையில் சனிக்கிழமை22-02-2020 இடம் பெற்று வருகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவுக்குற்பட்ட அதிகளவான இளைஞர்கள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதனை உறுதிபடுத்தியுள்ள நிலையில் அவர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிடுகின்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணையத்தளம் மூலம் பதிவுகளை மேற்கொண்டு இன்றைய தினம் மன்னார் பிரதேச செயலகத்தில் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காத்தான்குடி, மட்டக்களப்பு, திருகோணமலை, கற்பிட்டி,காத்தான்குடி, புத்தளம், போன்ற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மன்னாரில் வசிக்காத நிலையில் மன்னார் பிரதேச இளைஞர் வாக்காளர்களாக தங்களை இணையத் தளம் மூலம் பதிவு செய்துள்ள நிலையில் பல பேரூந்துகள் மூலம் மன்னார் நகரிற்கு வந்து இன்றைய தினம் வாக்களித்துள்ளனர்.
இதனால் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இளைஞர் வாக்காளர்களுக்கும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதே வேளை மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் இளைஞர் வேட்பாளர்களும், வாக்காளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இடம் பெறும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து வாக்களித்து செல்வதினால் குறித்த தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யவும், அல்லாது விட்டால் மாவட்ட ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக மன்னார் நகர வேட்பாளர்களும், இளைஞர் வாக்காளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளுக்கு குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்திய போதும் அவர்கள் இலங்கை இளைஞர் கழகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமறு கோருகின்றனர் அங்கு தொடர்பு கொள்ளும் போது அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவுக்குற்பட்ட அதிகளவான இளைஞர்கள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதனை உறுதிபடுத்தியுள்ள நிலையில் அவர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிடுகின்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணையத்தளம் மூலம் பதிவுகளை மேற்கொண்டு இன்றைய தினம் மன்னார் பிரதேச செயலகத்தில் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காத்தான்குடி, மட்டக்களப்பு, திருகோணமலை, கற்பிட்டி,காத்தான்குடி, புத்தளம், போன்ற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மன்னாரில் வசிக்காத நிலையில் மன்னார் பிரதேச இளைஞர் வாக்காளர்களாக தங்களை இணையத் தளம் மூலம் பதிவு செய்துள்ள நிலையில் பல பேரூந்துகள் மூலம் மன்னார் நகரிற்கு வந்து இன்றைய தினம் வாக்களித்துள்ளனர்.
இதனால் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இளைஞர் வாக்காளர்களுக்கும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதே வேளை மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் இளைஞர் வேட்பாளர்களும், வாக்காளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இடம் பெறும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து வாக்களித்து செல்வதினால் குறித்த தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யவும், அல்லாது விட்டால் மாவட்ட ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக மன்னார் நகர வேட்பாளர்களும், இளைஞர் வாக்காளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளுக்கு குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்திய போதும் அவர்கள் இலங்கை இளைஞர் கழகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமறு கோருகின்றனர் அங்கு தொடர்பு கொள்ளும் போது அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யுமாறு இளைஞர்கள் கோரிக்கை.
Reviewed by Author
on
February 23, 2020
Rating:
No comments:
Post a Comment